கோவை: கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.
கோவை: கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டு வருகிறது. இதனால், பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத சூழல் நிலவி வருகிறது. நேற்றும் வழக்கம் போல, பகல் நேரங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. இதைத்தொடர்ந்து, மாலை நேரத்தில், குளிர் காற்று வீசியது. பின்னர், இரவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் விடிய விடிய மழை நீடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 72 மி.மீ மழையும், ஈரோடு மாவட்டம் கோபியில் 49 மி.மீ மழையும், பெரியநாயக்கன் பாளையம் மற்றும் வடகோவை பகுதிகளில் 37 மி.மீ மழையும், கோவை விமான நிலையம் பகுதியில் 35 மி.மீ மழையும், நீலகிரி மாவட்டம் குன்னூரில் 17 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
