கோவை: கோவையில் இன்று நடைபெற்ற பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைத்து ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோவை: கோவையில் இன்று நடைபெற்ற பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் அனைத்து ஏ.டி.எம் மையங்களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு கோவையில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டினை இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாசலம் மாநாட்டினை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் முடிவில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட சில தனியார் வங்கிகளை அரசுடைமையாக்க வேண்டும், அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் போதிய அளவிலான பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாங்க் ஆஃப் பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில மாநாடு கோவையில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டினை இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் வெங்கடாசலம் மாநாட்டினை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் முடிவில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல், ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட சில தனியார் வங்கிகளை அரசுடைமையாக்க வேண்டும், அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் போதிய அளவிலான பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனடியாக அமைக்கக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.