மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு வீட்டில் சேர்த்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவை : மனநலம் பாதிக்கப்பட்டு கோவை சாலைகளில் சுற்றித்திருந்த 40 வயது வாலிபர் ஒருவரை ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் மீட்டு அவரது வீட்டில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : மனநலம் பாதிக்கப்பட்டு கோவை சாலைகளில் சுற்றித்திருந்த 40 வயது வாலிபர் ஒருவரை ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் மீட்டு அவரது வீட்டில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று அந்தோணி (40) என்ற ஒரு வாலிபர் கழுத்தில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்ட நிலையில் சுற்றிக் கொண்டிருந்தார். இரும்பு கம்பிகள் கழுத்தில் காயங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 



தகவலின் பேரில் அங்கு சென்ற அந்த தன்னார்வ அமைப்பினர், அந்தோணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.



அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது வீடு புலியகுளம் பகுதில் இருப்பதும் தெரியவந்தது. சிகிச்சைக்குப் பின்னர் அந்தோணியை அழைத்துச் சென்ற ஈர நெஞ்சம் அறக்கட்டளை அவரது வீட்டில் ஒப்படைத்தனர். 



நீண்ட நாட்களுக்குப் பின் சகோதரரைக் கண்ட அந்தோணியின் தம்பி ஜோசப் தன்னார்வ அமைப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...