கோவை : மனநலம் பாதிக்கப்பட்டு கோவை சாலைகளில் சுற்றித்திருந்த 40 வயது வாலிபர் ஒருவரை ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் மீட்டு அவரது வீட்டில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : மனநலம் பாதிக்கப்பட்டு கோவை சாலைகளில் சுற்றித்திருந்த 40 வயது வாலிபர் ஒருவரை ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் மீட்டு அவரது வீட்டில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று அந்தோணி (40) என்ற ஒரு வாலிபர் கழுத்தில் இரும்பு கம்பிகள் சுற்றப்பட்ட நிலையில் சுற்றிக் கொண்டிருந்தார். இரும்பு கம்பிகள் கழுத்தில் காயங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டவர் குறித்து கோவை ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் பேரில் அங்கு சென்ற அந்த தன்னார்வ அமைப்பினர், அந்தோணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது வீடு புலியகுளம் பகுதில் இருப்பதும் தெரியவந்தது. சிகிச்சைக்குப் பின்னர் அந்தோணியை அழைத்துச் சென்ற ஈர நெஞ்சம் அறக்கட்டளை அவரது வீட்டில் ஒப்படைத்தனர்.

நீண்ட நாட்களுக்குப் பின் சகோதரரைக் கண்ட அந்தோணியின் தம்பி ஜோசப் தன்னார்வ அமைப்பினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.