எச். ராஜாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ., கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை

கோவை: அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பரப்பினால் தமிழகத்தில் நடமாட முடியாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை: அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பரப்பினால் தமிழகத்தில் நடமாட முடியாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வரும் 23-ம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வடகோவை பகுதியில் உள்ள தி.மு.க.,வின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்துள்ள எச். ராஜாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தி.மு.க.,வின் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எச். ராஜா தொடர்ந்து இதுபோன்ற அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும், தி.மு.க., தொடர்பாகவும் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை உருவாகும். சட்ட ரீதியாக எச். ராஜா மீது வழக்கு தொடுப்பது குறித்து தி.மு.க. தலைமை முடிவு செய்யும்," என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...