கோவை: அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பரப்பினால் தமிழகத்தில் நடமாட முடியாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பரப்பினால் தமிழகத்தில் நடமாட முடியாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு தி.மு.க., எம்.எல்.ஏ. நா. கார்த்திக் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வரும் 23-ம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வடகோவை பகுதியில் உள்ள தி.மு.க.,வின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்துள்ள எச். ராஜாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தி.மு.க.,வின் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எச். ராஜா தொடர்ந்து இதுபோன்ற அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும், தி.மு.க., தொடர்பாகவும் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை உருவாகும். சட்ட ரீதியாக எச். ராஜா மீது வழக்கு தொடுப்பது குறித்து தி.மு.க. தலைமை முடிவு செய்யும்," என்றார்.
காவிரி விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வரும் 23-ம் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் வடகோவை பகுதியில் உள்ள தி.மு.க.,வின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 23-ம் தேதி மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்துள்ள எச். ராஜாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தி.மு.க.,வின் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எச். ராஜா தொடர்ந்து இதுபோன்ற அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும், தி.மு.க., தொடர்பாகவும் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை உருவாகும். சட்ட ரீதியாக எச். ராஜா மீது வழக்கு தொடுப்பது குறித்து தி.மு.க. தலைமை முடிவு செய்யும்," என்றார்.