பேராசிரியை விவகாரம்: மதுரை காமராஜர் பல்கலை., துணைவேந்தர், பதிவாளரிடம் விசாரணை

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.


பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் செல்லதுரை மற்றும் பதிவாளர் சின்னையாவிடம் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள  தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாகச் சர்ச்சையில் சிக்கிய  பேராசிரியை நிர்மலா தேவியின் வாட்ஸ்ஆப் ஆடியோ விவகாரம் தொடர்பாக, விசாரிக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானத்தை நியமித்து ஆளுநர்  உத்தரவிட்டார். விசாரணை நடத்துவதற்காக மதுரை அரசு விருந்தினர் மாளிகை வந்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக பல்கலை பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை நடத்தினார். இதன் பின்னர் துணைவேந்தர் செல்லதுரையிடம் விசாரணை நடத்தினார்.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி விருதுநகரில் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், பேராசிரியை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 7 குழுக்கள் அமைக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர். எஸ்.பி., ராஜேஷ்வரி மற்றும் டி.எஸ்.பி., முத்து சங்கரலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...