நொய்யலில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல்

கோவை: நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை: நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நொய்யல் ஆற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் வீடியோ காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது. அந்த வீடியோ-வில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறைக்கு லஞ்சம் கொடுத்து தான் மணல் அள்ளுவதாக சிலர் பேசும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.

நொய்யலில் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து, விதி மீறி நொய்யலில் மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.



இந்த நிலையில், நேற்று ஆற்றுப்படுகையில் இருந்து சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த மினி லாரி ஒன்றையும் அதன் பின் வந்த இருசக்கர வாகனத்தையும் நரசிபுரம் அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும், காருண்யா நகர் பகுதியில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியையும் போலீசார் பிடித்தனர். ஆனால், அந்த வாகனங்களில் வந்த நபர்கள் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.



தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...