கோவை: நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நொய்யல் ஆற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் வீடியோ காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது. அந்த வீடியோ-வில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறைக்கு லஞ்சம் கொடுத்து தான் மணல் அள்ளுவதாக சிலர் பேசும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.
நொய்யலில் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து, விதி மீறி நொய்யலில் மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், நேற்று ஆற்றுப்படுகையில் இருந்து சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த மினி லாரி ஒன்றையும் அதன் பின் வந்த இருசக்கர வாகனத்தையும் நரசிபுரம் அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும், காருண்யா நகர் பகுதியில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியையும் போலீசார் பிடித்தனர். ஆனால், அந்த வாகனங்களில் வந்த நபர்கள் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நொய்யல் ஆற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் வீடியோ காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது. அந்த வீடியோ-வில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறைக்கு லஞ்சம் கொடுத்து தான் மணல் அள்ளுவதாக சிலர் பேசும் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது.
நொய்யலில் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதனைத் தொடர்ந்து, விதி மீறி நொய்யலில் மணல் அள்ளுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், நேற்று ஆற்றுப்படுகையில் இருந்து சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த மினி லாரி ஒன்றையும் அதன் பின் வந்த இருசக்கர வாகனத்தையும் நரசிபுரம் அருகே போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும், காருண்யா நகர் பகுதியில் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியையும் போலீசார் பிடித்தனர். ஆனால், அந்த வாகனங்களில் வந்த நபர்கள் தப்பியோடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.