தமிழகத்தை ஆளுவது அரசா...? ஆளுநரா...?

தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு அரசை விட ஆளுநரின் அறிவிப்புகளே முதலில் குரல் கொடுப்பதால், ஆட்சி செய்வது யார் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே கிளம்பியுள்ளது.


தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு அரசை விட ஆளுநரின் அறிவிப்புகளே முதலில் குரல் கொடுப்பதால், ஆட்சி செய்வது யார் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே கிளம்பியுள்ளது. 

தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஆட்சி நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைகளை தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. 

இந்த நிலையில் அருப்புக் கோட்டை கல்லூரி பேராசிரியை ஒருவர் மாணவிகளை பாலியலுக்கு வலியுறுத்தியது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, அந்தப் பேராசிரியை கைது செய்து, இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இது தொடர்பாக, அரசு தரப்பில் இருந்து இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. தலைமை செயலாளர் அந்தஸ்திலிருந்து ஓய்வு பெற்ற சந்தானம் விரைவில் விசாரணையை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆளுநர் அலுவலகத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் தமிழக அரசு மீதான விமர்சனங்கள் மேலும் எழுத் தொடங்கியுள்ளன. வழக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுதான் நிர்வாகமாகச் செயல்படும். ஆனால், இப்போது பல அறிவிப்புகள் நேரடியாக ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியாகின்றன. பிறகு மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசு எதற்காக..? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் விசாரணைக்கு உத்தரவிடுவதாக ஆளுநர் கூறுகிறார். இந்த மாதிரியான நேரடியாக நிர்வாகம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டா..? என்ற கேள்வியும் பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...