சேலம்: உடல் நலம் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம்: உடல் நலம் பாதிக்கப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணை கொலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 40 வயது ராஜேஸ்வரி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோரிமேட்டில் உள்ள மையத்தில், இந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு கடந்த மாதம் 5ம்தேதி முதல் காலில் நரம்பு பாதித்ததால் பக்கவாதம் ஏற்பட்டது. இதனால், அன்று முதல் யானை தொடர்ந்து படுத்துக் கொண்டே இருக்கிறது.
இதனையடுத்து யானை நிலைமை மோசமடைந்ததையடுத்து கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் தொடர்ந்தார். மேலும், யானைக்கு இதுவரை அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும், யானையைப் பரிசோதித்து 48 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு விதிகளுக்கு உட்பட்டே கருணை கொலை செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 40 வயது ராஜேஸ்வரி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கோரிமேட்டில் உள்ள மையத்தில், இந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு கடந்த மாதம் 5ம்தேதி முதல் காலில் நரம்பு பாதித்ததால் பக்கவாதம் ஏற்பட்டது. இதனால், அன்று முதல் யானை தொடர்ந்து படுத்துக் கொண்டே இருக்கிறது.
இதனையடுத்து யானை நிலைமை மோசமடைந்ததையடுத்து கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் தொடர்ந்தார். மேலும், யானைக்கு இதுவரை அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், யானையை கருணை கொலை செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும், யானையைப் பரிசோதித்து 48 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு விதிகளுக்கு உட்பட்டே கருணை கொலை செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.