கர்நாடக காய்கறிகள் வரத்து அதிகரிப்பு : நீலகிரி காய்கறிகள் விலை சரிவு

நீலகிரி: காய்கறி விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்ட காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.


நீலகிரி: காய்கறி விளைச்சல் அதிகரிப்பு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரித்துள்ளதால், நீலகிரி மாவட்ட காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு, தென் மேற்கு பருவ மழை மற்றும் வட கிழக்கு பருவ மழை ஓரளவு பெய்தது. இதனால், மாவட்டத்தில் முக்கிய பயிர்களான உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டன. இதன் காரணமாக காய்கறிகளின் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்தாண்டு உச்சம் தொட்ட காய்கறிகளின் விலை இந்தாண்டு கடுமையாக சரிந்துள்ளது.



மேலும், கர்நாடகா மாநிலத்திலிருந்து காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் நீலகிரியில் விளையும் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள் காய்கறிகளை வாகனங்களில் ஏற்றி, கிராமந்தோறும் விற்பனை செய்து வருகின்றனர். உதகை, கூடலூர் மார்க்கெட்டுக்கு கர்நாடகா மாநிலம் குண்டல்பெட்டிலிருந்து காய்கறி வரத்து வரும் நிலையில், குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் வியாபாரிகள் மேட்டுப்பாளையத்திலிருந்து காய்கறி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளிலிருந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு, கோத்தகிரி வரும் வழி நெடுகிலும் உள்ள கிராமங்கள் முதல் குக்கிராமங்களை வரை காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். விலை சரிவு குறித்து தினசரி சந்தை வியாபாரிகள் கூறுகையில், "கடந்தாண்டு சராசரி மழை பெய்ததால், காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. முக்கிய காய்கறிகளான உருளைக் கிழங்கு கிலோ ரூ.20-24, பீட்ரூட் ரூ.13-க்கு விலை போனது. கடந்த மாதம் ரூ.70க்கு விலை கேரட், தற்போது ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



முட்டைக்கோஸ் கிலோ ரூ.15-க்கு, பீன்ஸ் கிலோ ரூ.20, பட்டாணி கிலோ ரூ.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ததால் பெரும்பாலானோர் காய்கறிகளை அறுவடை செய்தனர். இதனால், வரத்து அதிகரித்தது. மேலும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் காய்கறி வரத்து அதிகரித்த காரணத்தால் விலை குறைந்து விட்டது." என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...