சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் உற்சவ திருவிழா 15-ம் தேதி தொடக்கம்

கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இது தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், "வரும் 15-ம் தேதி சித்திரை கனி திருநாளன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் உற்சவ திருவிழா தொடங்க உள்ளது. 

தொடர்ந்து, 16-ம் தேதி சிறப்பு பூஜைகளும், அன்று மாலை இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 17-ம் தேதி காலை களபாபிஷேக சிறப்பு பூஜைகளும், 18-ம் மற்றும் 19-ம் தேதிகளில் சிறப்பு பூஜைகளும், 20-ம் தேதி உற்சவ பலி, சிறப்பு தரிசனம், ஸ்ரீ சக்கர பூஜை, கோமாதா பூஜை ஆகியன நடைபெறும்.

21-ம் தேதி காலை 6.30-க்கு தீபாரதனைக்குப் பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் சுவாமி செண்டை மேளம், பஞ்சவாத்தியம் முழங்க ஆவரம்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஐய்யப்பன் கோவிலுக்கு வந்தடையும். 

மேலும், 22-ம் தேதி மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஐந்து யானைகளுடன் காவடியாட்டம், தெய்யம், பூதன் திறை, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் நகர்வலம் நடைபெற்று, ஐந்து யானைகளுடன் ஆறாட்டு திருவீதி உலாவுடன் நிறைவடையும்." என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...