கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோவை : சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இது தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், "வரும் 15-ம் தேதி சித்திரை கனி திருநாளன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் உற்சவ திருவிழா தொடங்க உள்ளது.
தொடர்ந்து, 16-ம் தேதி சிறப்பு பூஜைகளும், அன்று மாலை இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 17-ம் தேதி காலை களபாபிஷேக சிறப்பு பூஜைகளும், 18-ம் மற்றும் 19-ம் தேதிகளில் சிறப்பு பூஜைகளும், 20-ம் தேதி உற்சவ பலி, சிறப்பு தரிசனம், ஸ்ரீ சக்கர பூஜை, கோமாதா பூஜை ஆகியன நடைபெறும்.
21-ம் தேதி காலை 6.30-க்கு தீபாரதனைக்குப் பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் சுவாமி செண்டை மேளம், பஞ்சவாத்தியம் முழங்க ஆவரம்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஐய்யப்பன் கோவிலுக்கு வந்தடையும்.
மேலும், 22-ம் தேதி மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஐந்து யானைகளுடன் காவடியாட்டம், தெய்யம், பூதன் திறை, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் நகர்வலம் நடைபெற்று, ஐந்து யானைகளுடன் ஆறாட்டு திருவீதி உலாவுடன் நிறைவடையும்." என்றனர்.
கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலின் 49-வது உற்சவ திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இது தொடர்பாக நிர்வாகிகள் கூறுகையில், "வரும் 15-ம் தேதி சித்திரை கனி திருநாளன்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் உற்சவ திருவிழா தொடங்க உள்ளது.
தொடர்ந்து, 16-ம் தேதி சிறப்பு பூஜைகளும், அன்று மாலை இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 17-ம் தேதி காலை களபாபிஷேக சிறப்பு பூஜைகளும், 18-ம் மற்றும் 19-ம் தேதிகளில் சிறப்பு பூஜைகளும், 20-ம் தேதி உற்சவ பலி, சிறப்பு தரிசனம், ஸ்ரீ சக்கர பூஜை, கோமாதா பூஜை ஆகியன நடைபெறும்.
21-ம் தேதி காலை 6.30-க்கு தீபாரதனைக்குப் பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பன் சுவாமி செண்டை மேளம், பஞ்சவாத்தியம் முழங்க ஆவரம்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஐய்யப்பன் கோவிலுக்கு வந்தடையும்.
மேலும், 22-ம் தேதி மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ஐந்து யானைகளுடன் காவடியாட்டம், தெய்யம், பூதன் திறை, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்துடன் நகர்வலம் நடைபெற்று, ஐந்து யானைகளுடன் ஆறாட்டு திருவீதி உலாவுடன் நிறைவடையும்." என்றனர்.