காவிரிக்காக மூன்றாவது முறையாக போராட்டம் நடத்துகிறது அ.தி.மு.க.

கோவை: காவரி விவகாரத்தில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக போராட்டம் நடத்தி வருகிறது.

காவரி விவகாரத்தில் அ.தி.மு.க. மூன்றாவது முறையாக போராட்டம் நடத்தி வருகிறது. 

தீர்க்கவே முடியாத பிரச்சனை போல காவிரி பிரச்சனையை மத்திய அரசு உருவகப்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஆனால் இந்த பிரச்சனை பல ஆண்டுகளைத் தீர்க்கப்படாமல் உள்ளதே நிதர்சனம். தமிழகத்தில் உள்ள கட்சிகள் காவிரிக்காக பல்வேறு காலகட்டத்தில் குரல் கொடுத்து வருகின்றன. 

அந்த வகையில் இன்று எடப்பாடி.பழனிசாமி தலைமையிலான ஆளும் அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. 



முன்னதாக, கடந்த 1993-ம் ஆண்டு காவிரிக்காக அ.தி.மு.க. குரல் கொடுத்தது. அன்றைய ஆளும் கட்சியாக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்தது. 

அதனைத் தொடர்ந்து, கடந்த 2007-ம் ஆண்டு அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரி ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். 

மொத்தத்தில் காவிரி விவகாரத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அ.தி.மு.க. தனது போராட்டத்தை தொடங்கிவிட்டது. 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...