முதுமலையில் ரூ. 4.50 லட்சம் மதிப்பில் காகித மறுசுழற்சி மையம் திறப்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் ரூ. 4.50 லட்சம் செலவில் காகித மறுசுழற்சி மையத்தை வனத்துறை செயலாளர் முகமது நசிமுதீன் திறந்து வைத்தார்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் ரூ. 4.50 லட்சம் செலவில் காகித மறுசுழற்சி மையத்தை வனத்துறை செயலாளர் முகமது நசிமுதீன் திறந்து வைத்தார்.



முதுமலை கார்குடி சரகத்துக்கு உட்பட்ட காஞ்சிக்கொல்லி பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சூழல் மேம்பாட்டுக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக்குழுவின் மூலமாக காகித மறுசுழற்சி மூலம் பைகள், உரைகள் உற்பத்தி மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்த நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 4.50 லட்சம் செலவில் காகித மறுசுழற்சி மையத்தை வனத்துறை செயலாளர் முகமது நசிமுதீன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் சீனிவாச ஆர்.ரெட்டி, துணை இயக்குநர் ஏ.சரவணன், கார்குடி சரகர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர். 



இந்த மையம் காஞ்சிக்கொல்லி சூழல் மேம்பாட்டுக்குழு மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ​ 

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...