மூதாட்டியை மீட்டு மகளிடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளை

கோவையில் தனியாக தவித்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் அவரது மகளிடம் சேர்த்துள்ளனர்.

கோவை: கோவையில் தனியாக தவித்த மூதாட்டியை மீட்ட ஈர நெஞ்சம் அறக்கட்டளையினர் அவரது மகளிடம் சேர்த்துள்ளனர்.

கடந்த 6-ம் தேதி கோவை ஆம்னி பேருந்து நிலையம் அருகே உள்ள குப்பை கிடங்கு பகுதியில் ஆதரவற்ற நிலையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை இருந்தார். 

அவர் மீட்கப்பட்டு ஈரநெஞ்சம் அறக்கட்டளை பராமரிப்பில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அந்த மூதாட்டியின் உறவினரைத் தேடும் முயற்சியை ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்டது. 

தொடர்ந்து, அந்த மூதாட்டியின் பெயர் சபீரா என்பதும் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆயிஷா என்பவரது தாய் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஆயிஷா-வுக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு சென்ற அவர் தனது தாயைப் பார்த்து கதறி அழுதார். 

மேலும், அவர் கூறும் போது, "குன்னூரில் எனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி அவர் வீட்டில் இருந்து மாயமானார். அன்று முதல் பல்வேறு இடங்களில் அவரை தேடினோம். ஆனால் கிடைக்கவில்லை. அம்மாவை காப்பாற்றி பராமரித்து எங்களிடம் ஒப்படைத்த ஈர நெஞ்சம் அறக்கட்டளைக்கு நன்றி." என்றார்.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...