ஆந்திராவில் பா.ஜ.க. அமைச்சர்கள் ராஜினாமா: சந்திரபாபு நாயுடுவிற்கு பதிலடி

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்த தெலுங்கு தேசம் கட்சிக்கு பதிலடி அளிக்கும் வகையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க, அமைச்சர்கள் இரண்டு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.


மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்த தெலுங்கு தேசம் கட்சிக்கு பதிலடி அளிக்கும் வகையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க, அமைச்சர்கள் இரண்டு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலக தெலுங்கு தேச கட்சி முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, மத்திய அமைச்சரவையிலிருந்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ மற்றும் ஓய்எஸ் சவுத்ரி இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தங்களது பதவி விலகல் குறித்து இருவரும் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க உள்ளனர்.



இந்நிலையில், தெலுங்கு தேச கட்சியின் முடிவுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், சந்திரபாபு அரசில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க., அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சுகாதார அமைச்சர் பதவி வகித்த கமினேனி ஸ்ரீநிவாஸ், மற்றும் மாநில அறநிலையத்துறை அமைச்சர் பிடிகொண்டலா மனிகைலா ராவ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்து, தங்களது கடிதத்தை முதலமைச்சர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

ஆந்திர சட்டசபையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: நேற்றைய ஜெட்லியின் அறிக்கை சரியானதல்ல. உங்கள் கைகளில் வடகிழக்கு மாநிலங்கள் இருக்கலாம். ஆனால், ஆந்திரா அல்ல. அந்த மாநிலங்களுக்கு தொழில் வளர்ச்சி நிதி நீங்கள் அளித்திருக்கலாம். ஆனால், ஆந்திராவிற்கு வழங்கவில்லை. ஏன் இந்தப் பாகுபாடு. மாநில அரசிலிருந்து பா.ஜ.க, அமைச்சர்கள் விலகியுள்ளனர். அவர்கள் மாநிலத்தின் நலனுக்காக சிறப்பாக உழைத்துள்ளனர். மாநிலத்தில் ஆக்கப்பூர்வமான சீர்திருத்தம் கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...