எச். ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது: ரஜினிகாந்த்

பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்ற எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்ற எச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமானது என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டுகளாக அங்கு ஆட்சி செய்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி படுதோல்வியடைந்தது. அங்கு வெற்றி பெற்ற பா.ஜ.க., கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, தெற்கு திரிபுரா மாவட்டத்தில் பெலோனியா என்ற நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த சோவியத் யூனியன் நாட்டைச் சேர்ந்த புரட்சியாளரும், கம்யூனிஸ்டு தலைவருமான லெனின் சிலையை பா.ஜ.க.வினர் அகற்றியதால் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பா.ஜ.க.,வின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பதிவில் இன்று திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் ஈ.வே.ரா.சிலை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யக் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசனும் நேற்று கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இன்று போயாஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்று கூறியது காட்டுமிராண்டித்தனமானது என்று அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, தனது அனுமதியின் தன்னுடைய முகநூல் அட்மின் இதனைப் பதிவு செய்துவிட்டதாகவும், இதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் எச். ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...