புகார் அளிக்கச் சென்றவர்களை தரக்குறைவாகப் பேசிய ஆய்வாளர்: காவல் நிலையம் முற்றுகை

புகார் அளிக்கச் சென்றவர்களை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.

திருப்பூர்: புகார் அளிக்கச் சென்றவர்களை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.



திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் - மகாலட்சுமி தம்பதியினர். இவர்களது 17 வயது மகள் அவினாசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இவருக்கும் கல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 

இந்நிலையில், காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து சண்முகத்தின் 17 வயது மகள் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது மகளை ஏமாற்றிய மாதவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகம் மற்றும் அவரது மனைவி நேற்று திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், அவர்களது புகாரை பெற மறுத்த காவல் ஆய்வாளர் தென்னரசு அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தகாத வார்த்தைகள் பேசிய காவல் ஆய்வாளரைக் கண்டித்து பா.ஜ.க.வினர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர உதவி ஆணையரிடம் மனு அளித்தனர். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வெள்ளிக்கிழமை மாலை பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...