நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணி காப்பதில் கோவைக்கு 3-ம் இடம்

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணி காப்பதில் 3-வது இடத்தைப் பிடித்த கோவை மாவட்டத்திற்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பெற்றுக் கொண்டார்.

கோவை : தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணி காப்பதில் 3-வது இடத்தைப் பிடித்த கோவை மாவட்டத்திற்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பெற்றுக் கொண்டார். 

தமிழக அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான 3 நாள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதன் இறுதி நாளான இன்று, சிறந்து விளங்கிய ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அந்த வகையில், பொதுப்பணித்துறை சார்பில் வண்டல் மண் அகற்றி நீர்நிலைகளை சிறந்த முறையில் பேணியதற்காக கோவை மாவட்டத்திற்கு 3-வது இடத்திற்கான விருது வழங்கப்பட்டது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரனிடம் வழங்கினார். 



இதேபோல, தமிழக அரசு சார்பில் தமிழகத்தின் சிறந்த ஆட்சியர், மாநகராட்சி, ஆணையர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த ஆட்சியர்களாக பொன்னையா (காஞ்சிபுரம்), ரோகிணி (சேலம்), சுப்பிரமணியன் (விழுப்புரம்) ஆகியோருக்கும், சென்னை மாநகராட்சி சிறந்த மாநகராட்சிக்கும், சிறந்த போலீஸ் ஆணையராக சென்னை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கான விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...