எச். ராஜாவின் உருவப்படத்தை காலணியால் அடித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை தொடர்பாக முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்த எச்.ராஜாவின் உருவப்படத்தை காலணியால் அடித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : பெரியார் சிலை தொடர்பாக முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்த எச்.ராஜாவின் உருவப்படத்தை காலணியால் அடித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திரிபுராவில் லெனின் சிலையை பா.ஜ.க.வினர் அகற்றியது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூலில் திரிபுராவில் இன்று லெனின் சிலை, தமிழகத்தில் நாளை சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை என பதிவிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எச்.ராஜா மற்றும் பா.ஜ.க.வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், எச். ராஜாவை கண்டித்து கோசங்களை எழுப்பி அவரது உருவப் படத்தை காலணியால் அடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, இன்று மாலை கோவை பெரியார் படிப்பகம் முன்பு, புரட்சிகர இளைஞர் முண்ணனி, புரட்சிகர மாணவர் முண்ணனி சார்பில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, வன்முறையை தூண்டும் வகையில் பேசும் எச். ராஜாவை, தமிழக அரசு சிறையில் அடைக்க வேண்டும் என்றும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ஆகியவை தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர். பின்னர், எச். ராஜாவின் உருவப் படத்தை தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...