சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட எச். ராஜாவிற்கு எதிராக தி.க.வினர் போராட்டம்

திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பா.ஜ.க. தேசிய செயலாளரான எச்.ராஜா நேற்று தனது முகநூல் பக்கத்தில் தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும்,  திரிபுராவில் லெனின் சிலை உடைக்கபட்டதற்கும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் சிலை சேதப்படுத்தியதைக் கண்டித்தும் திராவிட கழகத்தினர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், எச்.ராஜா புகைப்படத்தை காலணியைக் கொண்டு அடித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், தொடர்ந்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடும் எச்.ராஜாவை உடனே கைது செய்ய வேண்டும் எனக் கோசங்களை எழுப்பினர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...