உலக பணக்காரர்களுக்கான பட்டியலில் அம்பானிக்கு 19-வது இடம்

உலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலக பணக்காரர்களுக்கான போர்ப்ஸ் பட்டியலில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 19-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

உலக பணக்காரர்களுக்கான பட்டியலை, போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில், இந்தியாவிலிருந்து 119 பேரும், அமெரிக்காவிலிருந்து 585 பேரும், சீனாவிலிருந்து 373 பேரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்தப் பட்டியலில், சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 40.1 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 19வது இடத்தில் உள்ளார் கடந்த வருடத்தை விட அவரது சொத்து மதிப்பு 16.9 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. சென்ற வருடம் முகேஷ் அம்பானி 33-வது இடத்தில் இருந்தார். 

விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 18.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 58-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத்தின் சேர்மன் லட்சுமி மிட்டல், 18.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 62-வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத்தின் சேர்மன் சிவ நாடார் 14.6 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 98-வது இடத்திலும், சன் பார்மாசிடிகல்ஸ் நிறுவனத்தின் திலிப் சங்வி 12.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 115-வது இடத்திலும் உள்ளனர்.

ஆதித்யா பிர்லா நிறுவன தலைவர் குமார் பிர்லா 11.8 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 127-வது இடத்திலும், கோடக் மகிந்திரா வங்கி நிர்வாக இயக்குநர் உதய் கோடாக் 10.7 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 143-வது இடத்திலும், ராதாகிருஷ்ணன் தாமினி 10 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 151-வது இடத்திலும், அதானி நிறுவனத்தின் நிறுவனர் கவுதம் அதானி 9.7 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 154-வது இடத்திலும், பூன்வாலா நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூன்வாலா 9.1 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 170-வது இடத்திலும் உள்ளனர். பதஞ்சலி நிறுவனத்தின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா 6.3 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 274வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பேஜோஸ் 100 பில்லியன் டாலர் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...