கடன் பத்திரங்களை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகப் புகார் : வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்

நீதிமன்ற உத்தரவின் படி விவசாயிக்குக் கடன் பத்திரங்களை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி பல்லடம் பகுதி விவசாயிகள் கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையை முற்றுகையிட்டனர்.

திருப்பூர்: நீதிமன்ற உத்தரவின் படி விவசாயிக்குக் கடன் பத்திரங்களை திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகக் கூறி பல்லடம் பகுதி விவசாயிகள் கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக் கிளையை முற்றுகையிட்டனர். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் வாவிபாளையம் செல்லாந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ரத்தினசாமி(46). இவர் கடந்த 2002-ம் ஆண்டு கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கிக்கிளையில் பயிர்க்கடன் பெற்றுள்ளார். 

போதிய மழையின்மை, வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயி ரத்தினசாமி அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து வங்கிக் கிளை நிர்வாகம் திருப்பூர் சார்பு நீதிமன்றத்தில் கடன் குறித்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விவசாயி ரத்தினசாமிக்கு ஆதரவாக கடனை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும், கடன் தொகைக்கான ஆவணங்களையும் விவசாயிடம் திருப்பித் தருமாறு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ரத்தினசாமி பலமுறை வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோதும் ஆவணங்களை திர்ப்பித் தராமல் காலதாமதம் செய்தும் அலைக்கழித்துள்ளனர். 

இதனால், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து தலைமையில் வங்கிக்கிளை அருகே திரண்ட விவசாயிகள் திடீர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பத்திரங்களைத் தரவேண்டும் என்றும் இல்லாவிட்டால் ஒட்டுமொத்த விவசாயிகளைத் திரட்டி மறியல் உள்ளிட்ட பல கட்டப் போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காமநாயக்கன்பாளையம் சம்பவ இடத்திற்குச் சென்று இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து ஆவணங்களை உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என வங்கி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...