எச். ராஜாவை கைது செய்யக் கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவையிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உதகை: பெரியார் சிலை தொடர்பாக சர்ச்சைக்குரிய பதிவையிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

திரிபுராவியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, பா.ஜ.க. முதல்முறையாக ஆட்சியமைத்துள்ளது. இதனையடுத்து பா.ஜ.க.வினர் திரிபுராவில் இருந்த லெனின் சிலையை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு அகற்றினர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும் என பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் கண்டன குரல் எழுப்பி வரும் நிலையில், தி.மு.க., கட்சியினர் எச்.ராஜாவின் பதிவை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக உதகையில் மாவட்ட மற்றும் நகர தி.மு.க., சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதகை மத்திய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கா. ராமசந்திரன் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், நகர செயலாளர் ஜார்ஜ், முஸ்தபா உள்ளிட்ட தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியார் சிலையை அகற்றுவேன் எனக் கூறிய எச். ராஜாவை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...