அரசியலுக்கு வர தயங்க மாட்டோம்- பெந்தெகொஸ்த் சபை பொது செயலாளர்

தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம் என்று பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கூறியுள்ளார்.

நீலகிரி: தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம் என்று பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கூறியுள்ளார். 

நீலகிரியில் கிறிஸ்துவ வழிப்பாட்டு தலங்களை மூட சில அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் போலீசாரை கண்டித்து உதகையில் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவ ஜெப வழிபாடு கூடங்களை நடத்த விடாமல் தடுக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. 

தொடர்ந்து, மத நல்லிணக்கத்திற்கு விரோதமாகவும், செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கிறித்துவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து பெந்தெகொஸ்த் சபையின் அகில இந்திய பொது செயலாளர் கே.பி.எடிசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது. தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியது கண்டனத்துக்குரியது. தேவைப்பட்டால் முஸ்லீம் தோழர்களுடன் இணைந்து அரசியலுக்கு வர தயங்க மாட்டோம்." என்றார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...