சிலை உடைப்பு சம்பவங்களில் ஈடுபடும் பா.ஜ.கவினர் மீது கடும் நடவடிக்கை: அமித்ஷா எச்சரிக்கை

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதில் பா.ஜ.க.வினருக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதில் பா.ஜ.க.வினருக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது :- ஒரு கட்சி என்ற முறையில், பறந்த அளவிலான கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை இந்தியாவில் இணைத்துக்கொள்ள முடியும் என்று நாங்கள் பா.ஜ.க.,வை நம்புகிறோம். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நம் பெரிய தேசத்தை எப்படிக் கருதினார்கள் என்பதுதான் இது. சிலைகளை அழிப்பதில் சமீபத்திய பிரச்சினை மிகவும் துரதிர்ஷ்டமானது. யாரும் சிலைகளை சேதப்படுத்துவதில் நாங்கள் ஒரு கட்சியாக ஆதரிக்கவில்லை. மக்களுடைய வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவதே எங்கள் முக்கிய நோக்கம். இந்தியாவில் உள்ள எல்லா மக்களுக்கும் எங்களது பணி மற்றும் செயல்பாடுகள் பெரிதும் பாராட்டை பெற்று உள்ளன. எங்கள் கூட்டணி அரசாங்கம் 20 மாநிலங்களில் சேவை செய்து வருகிறது.

தமிழ்நாடு மற்றும் திரிபுரா ஆகிய மாநில கட்சி தொண்டர்களுக்கும் கூறிக்கொள்கிறேன். பா.ஜ.க. தொடர்புடைய எந்த நபரும் சிலைகளை சேதப்படுத்துவதில் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்தால் கட்சியில் இருந்து கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...