தமிழகம், திரிபுராவில் சிலைகள் உடைப்பு சம்பவங்களால் பிரதமர் மோடி அதிருப்தி

தமிழகம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் சிலைகளை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான ஆட்சிக்கு முடிவு கட்டிய பா.ஜ.க., முதல்முறையாக அங்கு வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. முதல் முறையாக பா.ஜ.க. திரிபுராவில் ஆட்சியை கைப்பற்றி இருப்பதால் அங்கு அக்கட்சியின் தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில இடங்களில் மார்க்சிஸ்ட்– பா.ஜ.க., தொண்டர்களிடையே மோதலும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள பெலோனியா நகரில் நிறுவப்பட்டிருந்த சோவியத் ரஷியாவின் மறைந்த தலைவர் லெனின் சிலை திடீரென அகற்றப்பட்டது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில், “லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்)’ என்று பதிவிட்டு இருந்தார். 

எச்.ராஜாவின் கருத்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தனது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, சர்ச்சைக்குரிய பதிவை தான் பதிவிடவில்லை எனவும், பேஸ்புக் அட்மின் தனது அனுமதியின்றி பதிவு செய்து விட்டார் என்றும் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் எச்.ராஜா விளக்கம் அளித்து இருந்தார். 

இந்த நிலையில், சிலைகள் சேதப்படுத்துவது தொடர்பான சம்பவங்களால் பிரதமர் மோடி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் பிரதமர் மோடி பேசியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, தலைவர்கள் சிலைகளை உடைப்பவர்கள் மீது மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிலைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுத்தியுள்ளது. 

Newsletter

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...