கோவையில் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

பெரியார் சிலைகளை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என்ற எச்.ராஜா-வின் பதிவுக்கு எதிராக கோவையில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.


கோவை: பெரியார் சிலைகளை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என்ற எச்.ராஜா-வின் பதிவுக்கு எதிராக கோவையில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 



திரிபுராவில் பா.ஜ.க. வெற்றி பெற்ற கையோடு அம்மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த லெனின் சிலைகள் அகற்றப்பட்டது. 

இந்த சூழலில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல, தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேஸ்புக் பதிவு செய்திருந்தார். 

இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பியது. 

இந்நிலையில், இன்று அதிகாலை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.



இது குறித்து அந்த அலுவலகத்தில் தங்கியிருந்த ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் கூறுகையில், "இன்று 3.10 மணியளவில் சத்தம் கேட்டது. உடனடியாக வெளி வந்து பார்த்தேன். அப்போது மூன்று பேர் எங்கள் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். 

அதில் ஒரு குண்டு சாலை நடுவே விழுந்து எரிந்தது. மற்றொன்று பிளக்ஸ் போர்டு மீது விழுந்தது. இதைப் பார்த்த போலீசார் அவர்களை விரட்டினர். ஆனால், அதற்குள் அந்த மூன்று பேரும் தப்பியோடிவிட்டனர்." என்றார்

தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, கோவையில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



காந்திபுரம், புலியகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...