மாநகராட்சி அலுவலகத்தில் 'பசுமை அங்காடி'யை திறந்து வைத்த ஆணையர்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பாக்குமரத்தட்டு, துணிப்பைகள் போன்ற மக்கும் பைகளை விற்கும் பசுமை அங்காடியகத்தை ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார்.


கோவை : கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பாக்குமரத்தட்டு, துணிப்பைகள் போன்ற மக்கும் பைகளை விற்கும் பசுமை அங்காடியகத்தை ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன் திறந்து வைத்தார். 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 'மை ஷாப்பிங் மை பேக்ஸ்' என்ற புதிய திட்டத்தின் முயற்சியாக, மாநகராட்சி பசுமை அங்காடி இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்தப் பசுமை அங்காடி பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மக்கும் தன்மை கொண்ட பொருட்களான துணிப்பைகள், சணல் பைகள், கரும்பு, சோளம் மற்றும் காய்கறி கழிவுகளைக் கொண்டு தயார் செய்யும் பல்வேறு கரிம பொருட்கள் இந்த அங்காடியில் விற்பனை செய்யப்படும். 

காகிதத்தால் ஆன பொருட்கள் மற்றும் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் ரூ. 1.60 காசுகள் முதல் ரூ. 250 வரை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படும். இந்தப் பசுமை அங்காடி தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, மதியம் 1.30 மணி முதல் 2.00 மணி உணவு இடைவேளை ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் செயல்படும். இந்த புதிய முயற்சியின் மூலம் மக்கும் பைகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா தூய்மையான, பசுமையான கோவை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். மேலும், இந்தப் பசுமை அங்காடி குறித்த பல்வேறு தகவல்களுக்கு 81900-00400 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...