கோடைக்கு முன்பே வறண்டு வரும் நீர்த்தேக்கங்கள் : பொதுமக்கள் கவலை

நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக திகழும் நீர்த்தேக்கங்கள் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு வருவதால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.


நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் முக்கிய நீராதாரமாக திகழும் நீர்த்தேக்கங்கள் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு வருவதால், பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 



கோடை காலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், குன்னூரில் தற்போதே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நகரில் உள்ள 30 வார்டுகளுக்கு நீர் விநியோகிக்கும் முக்கிய நீராதாரமான ரேலியா அணையில் மட்டுமே 39 அடி நீர் இருப்பு உள்ளது. கோடை கால தேவைக்காக இந்த அணையிலிருந்து நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சிறிய அளவிலான பந்துமி, ஜிம்கானா, கரடிபள்ளம் ஆகிய பிற நீராதாரங்களை தண்ணீர் தேவைக்காக மக்கள் நம்பியிருந்தனர். 

இந்நிலையில், பனிக்காலம் மற்றும் பருவமழை பொய்த்துப் போனதால் பந்துமி நீர்த்தேக்கத்துக்கான நீர்வரத்து நின்று விட்டது. இதனால், நீர்வரத்து இல்லாமல் பந்துமி நீர்த்தேக்கம் முற்றிலுமாக வறண்டு விட்டது. தற்போது, நீரில்லாமல் நீர்த்தேக்கம் தரிசு நிலம் போல் காட்சியளிக்கிறது. கடும் தண்ணீர் தட்டுப்பாட்டில் குன்னூர் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தண்ணீர் தேவையை சமாளிக்க மக்கள் நம்பியிருந்த நீராதாரங்கள் ஒவ்வொன்றாக வறண்டு வருவது மக்களை கவலையடைய செய்துள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...