சிரியா தாக்குலை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : சிரியாவில் நடைபெற்று வரும் தாக்குதலை கண்டித்து கோவையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசுப் படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் கொன்று குவித்து வருகின்றனர். இதற்கு எதிராக தமிழகத்தில் இருந்து கண்டனக் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

அந்த வகையில், சிரியாவில் நடைபெறும் தாக்குதலை கண்டித்தும், போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிரியா மற்றும் ரஷிய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார். போராட்டத்தின் போது திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிரியா நாட்டு கொடியை எரித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கண்ட போலீசார் தீயை அணைத்தனர். இதைத் தொடர்ந்து, சிரியா அரசின் தாக்குதலால் பலத்த காயங்களுடன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதை சித்தரிக்கும் வகையில் கட்டு போட்டும் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்துவது போல போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...