பெரியார் சிலை விவகாரம் : எச். ராஜாவை கைது செய்ய வலியுறுத்தல்

பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

கோவை : பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர். 



திரிபுராவில் பா.ஜ.க., வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் உலகத் தலைவர் லெனின் சிலை அகற்றப்பட்டு இருக்கிறது. இது இந்தியா முழுக்க சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. இந்த சர்ச்சை அடங்கும் முன் லெனின் சிலை போல நாளை தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். அவரது கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா உருவப் படத்தை எரித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் மாரியப்பன் பேசியதாவது :- லெனினின் சிலை உடைக்கப்பட்டது போல பெரியார் சிலை உடைக்கப்படும் எனக் கூறியது கண்டனத்துக்குரியது. எச். ராஜாவை பா.ஜ.க.,வில் இருந்து நீக்க வேண்டும். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் ராஜாவை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இந்திய மாணவர் சங்கம் மூலம் அனைத்து மாணவர்களையும் இணைத்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...