திரிபுராவில் பா.ஜ.க., கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மோதல் : கலவரத்தால் 144 தடை உத்தரவு

திரிபுராவில் புதிய அரசு ஆட்சியமைக்க உள்ள நிலையில், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திரிபுராவில் புதிய அரசு ஆட்சியமைக்க உள்ள நிலையில், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 



திரிபுரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. இதன்மூலம் 25 ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. மொத்தம் உள்ள 60 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க. இந்த வெற்றியை திரிபுரா மக்கள் முன்னணி என்ற மாநிலக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து பெற்றது. தேர்தலின் போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்த தேர்தல் மோதலில் பா.ஜ.க. தொண்டர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தேர்தல் முடிவு வெளியான பின்பு பா.ஜ.க. தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, மேற்கு திரிபுரா மாவட்டத்தில் சித்தாய் பகுதியிலும், வடக்கு திரிபுரா மாவட்டத்தில் கதம்தலாவிலும் பா.ஜ.க. தொண்டர்களுக்கும் கம்யூனிஸ்டு தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், இரு கட்சியின் அலுவலகங்களும் தாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்த லெனின் சிலை தகர்க்கப்பட்டது. பதிலுக்கு பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்பட்டது. இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் பயங்கர கலவரம் மூண்டது. இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.

கலவரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திரிபுரா கலவரம் பற்றி தகவல் அறிந்ததும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடனடியாக திரிபுரா ஆளுநர் தாதகத்தராய் மாநில போலீஸ் டி.ஜி.பி. ஏ.கே. சுக்லா ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசினார். கலவரத்தை அடக்க மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கை எடுக்குமாறும், புதிய அரசு பதவி ஏற்கும் வரை கலவரம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...