கோவையில் போலி பத்திரிக்கையாளர்களைப் பிடிக்க உத்தரவு

வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உலாவரும் போலி பத்திரிக்கையாளர்களைப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு உலாவரும் போலி பத்திரிக்கையாளர்களைப் பிடிக்க கோவை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

செய்தியாளராகப் பணி புரியும் ஒருவர் பணி நிமித்தமாக நாள்தோறும் பல்வேறு இடங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் செல்ல நேரிடும். இதனைக் கருத்தில் கொண்டு செய்தியாளர்கள் வாகனங்களில் "பிரஸ்" (PRESS) என்ற ஸ்டிக்கரை பொருத்தியுள்ளனர். இதன் மூலம், குறித்த நேரத்திற்குள், குறித்த இடத்திற்கு பத்திரிக்கையாளர்களால் செல்ல முடிகிறது.

ஆனால், பத்திரிக்கையாளர்கள் அல்லாத சிலரும் அவர்களது வாகனங்களில் "பிரஸ்" என்ற ஸ்டிக்கர்களை ஒட்டியிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. அவ்வாறு, போலியாக பிரஸ் ஸ்டிக்கரை ஒட்டியிருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்தது, போலியாக பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளவர்களைப் பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். நேற்று வழங்கப்பட்ட இந்த உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசு முத்திரையுடன் வழங்கப்பட்ட பிரஸ் ஸ்டிக்கர்களைப் போல போலியாக பிரஸ் ஸ்டிக்கர்களை தயாரித்து வாகனங்களில் ஒட்டியுள்ள போலி பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதே போல் சமீபத்தில் சென்னை மற்றும் சேலத்தில் போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...