காவிரி விவகாரத்தில் சந்திக்க மறுப்பது வேதனையளிக்கிறது : முதலமைச்சருடனான சந்திப்புக்கு பின் ஸ்டாலின் பேட்டி

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினரை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனையளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பிறகு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சியினரை பிரதமர் சந்திக்க மறுப்பது வேதனையளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பிறகு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

காவிரி நதிநீர் பிரச்னையில் கடந்த மாதம் 16-ம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், காவிரி நடுவர் மன்றம், தமிழகத்திற்கு நிர்ணயித்திருந்த நீரின் அளவில் 14.75 டி.எம்.சி.,யை குறைத்து 177.25 டி.எம்.சி., வழங்க உத்தரவிட்டதுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க கர்நாடகாவில் வரும் 7-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார். 

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி, தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மற்றும் தி.மு.க., துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:- காவிரி பிரச்னை குறித்து பேச நேரம் கேட்டபோது, பிரதமர் சந்திக்க மறுப்பதாகவும், அந்த துறை அமைச்சரை வேண்டுமானால், சந்தியுங்கள் என்றும் பிரதமர் அலுவலகத்தில் கூறுகிறார்கள். என்ன செய்யலாம் என முதலமைச்சர் என்னிடம் கேட்டார். முதலமைச்சர் பழனிசாமி தனியாக சென்றாலோ, துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் தனியாக சென்றாலோ சந்திக்கும் பிரதமர், முக்கிய பிரச்சினையான காவிரி விவகாரம் தொடர்பாக சந்திக்க மறுப்பது ஏன்..?. வரும் திங்கட்கிழமைக்குள் பிரதமரிடம் இருந்து அழைப்பு வராவிட்டால், வரும் 8-ம் தேதி சட்டசபை கூட்டப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார். பிரதமர் சந்திக்க மறுத்தால் தமிழக எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள் என பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும் என முதலமைச்சரிடம் கூறினேன். இவ்வாறு கூறினார்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சி தலைவர்கள் குழுவை சந்திக்க பிரதமர் மறுத்துவிட்டார் என்பது தவறான தகவல். முதலில் துறை அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று தான் கூறப்பட்டது. அமைச்சரை சந்தித்த பின்னர் பிரதமரை சந்திக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...