திருப்பூரில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.
திருப்பூர் : திருப்பூரில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

மாநகராட்சிக்கு உட்பட்ட முருகம்பாளையம் அருகே உள்ள செல்லம் நகரில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான குடோனை, முருகன் என்பவர் வாடகைக்கு எடுத்து பழைய பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்து விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் குடோனில் இருந்து புகை மூட்டம் கிளம்புவதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே, குடோனில் இருந்து கரும்புகையுடன் கொழுந்து விட்டு, தீ எரிய ஆரம்பித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் தீயை கட்டுக்குள் கொண்டு வரப் போராடினர். அப்போது, பிளாஸ்டிக் கேன்களில் ஆசிட் கழிவுகள் வைக்கப்பட்டிருந்ததால், தீயை அணைப்பதில் சிக்கல் நீடித்தது. பின்னர், கடும் போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தீவிபத்தினால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.

மாநகராட்சிக்கு உட்பட்ட முருகம்பாளையம் அருகே உள்ள செல்லம் நகரில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான குடோனை, முருகன் என்பவர் வாடகைக்கு எடுத்து பழைய பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்து விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் குடோனில் இருந்து புகை மூட்டம் கிளம்புவதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனிடையே, குடோனில் இருந்து கரும்புகையுடன் கொழுந்து விட்டு, தீ எரிய ஆரம்பித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் தீயை கட்டுக்குள் கொண்டு வரப் போராடினர். அப்போது, பிளாஸ்டிக் கேன்களில் ஆசிட் கழிவுகள் வைக்கப்பட்டிருந்ததால், தீயை அணைப்பதில் சிக்கல் நீடித்தது. பின்னர், கடும் போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தீவிபத்தினால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.