பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து : பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

திருப்பூரில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

திருப்பூர் : திருப்பூரில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. 



மாநகராட்சிக்கு உட்பட்ட முருகம்பாளையம் அருகே உள்ள செல்லம் நகரில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான குடோனை, முருகன் என்பவர் வாடகைக்கு எடுத்து பழைய பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்து விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் குடோனில் இருந்து புகை மூட்டம் கிளம்புவதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். 

இதனிடையே, குடோனில் இருந்து கரும்புகையுடன் கொழுந்து விட்டு, தீ எரிய ஆரம்பித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் தீயை கட்டுக்குள் கொண்டு வரப் போராடினர். அப்போது, பிளாஸ்டிக் கேன்களில் ஆசிட் கழிவுகள் வைக்கப்பட்டிருந்ததால், தீயை அணைப்பதில் சிக்கல் நீடித்தது. பின்னர், கடும் போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், இந்த விபத்து குறித்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தீவிபத்தினால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. 

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...