கருவேப்பிலை விலை இரு மடங்காக உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம் பகுதிகளில் பயிர்செய்யப்படும் கருவேப்பிலையின் விலை இரு மடங்காக உயர்ந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதிகளில் பயிர்செய்யப்படும் கருவேப்பிலையின் விலை இரு மடங்காக உயர்ந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வாழைக்கு அடுத்தபடியாக கருவேப்பிலை விவசாயம் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் செங்காம்பு கருவேப்பிலை தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. 

இரு பருவ காலங்களாக உற்பத்தி செய்யப்படும் இந்த கருவேப்பிலையின் விலை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கிலோ ஒன்றிக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை வரை மட்டுமே கிடைத்து வந்தது. இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாகவும் கருவேப்பிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் அதன் மகசூலும் குறைந்தது. 

கடந்த ஒரு மாத காலமாக கருவேப்பிலையின் விலை படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் கிலோ ரூ.20 இருபது வரை கிடைத்து வந்தது. தற்போது கேரளாவிற்கு ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளதால் மேட்டுப்பாளையம் பகுதியில் விளையும் கருவேப்பிலையின் விலை மேலும் உயர்ந்து தற்போது கிலோ ஒன்றிக்கு ரூ.35 முதல் ரூ.40 வரை விலை கிடைத்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.



கேரளாவிற்கு நாள் ஒன்றிக்கு சுமார் 10 டன் வரை கருவேப்பிலை அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. ஏக்கர் ஒன்றிக்கு நாற்பதாயிரம் வரை செலவு செய்யும் கருவேப்பிலை விவசாயிகள் கடந்த பல மாதங்களாக கடும் இழப்பினை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...