மேட்டுப்பாளையம் சாலையில் அதிவேகமாக வந்த பேருந்து ஒதுக்கியதில் கோபம் அடைந்த கணவன் மனைவி பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மேட்டுப்பாளையம் சாலையில் அதிவேகமாக வந்த பேருந்து ஒதுக்கியதில் கோபம் அடைந்த கணவன் மனைவி பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் தினமும் போட்டி போட்டு அதிக வேகமாக ஓட்டி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அடிக்கடி அந்த சாலையில் விபத்து ஏற்படுகிறது. பேருந்துகளின் போட்டிகளின் மத்தியில் அதிகம் பாதிக்கபடுவது இரு சக்கர வாகன ஓட்டிகள். இது மட்டுமில்லாமல் அதிவேகமாக ஓட்டும் பேருந்து ஓட்டுனர்கள் சாலையில் செல்லும்மற்ற வாகன ஓட்டிகளை ஒதுக்கிவிடுவதை வாடிக்கையாக்கிவிட்டனர். இதனால் அடிக்கடி பேருந்து ஓட்டுனர்களுக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது.

அதே போல் இன்று மதியம் வடமதுரையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த கணவன் மனைவியை அதே வழியில் வந்த TN 38 N 2983 என்ற எண் கொண்ட (89B) அரசு பேருந்து சாலையில் இருந்து ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் கோபமடைந்த இரு சக்கர வாகன ஓட்டி பேருந்தை நிறுத்தம் வரை துரத்தி சென்று தவறை சுட்டி காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 



இதனால் கோபம் அடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் அவர்களை தகாத முறையில் திட்டியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து பேருந்து பயணிகள் இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவியை சமாதனபடுத்தினர்.

இது குறித்து மேட்டுப்பாளையம் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டி அர்னால்ட் கூறியதாவது:- இந்த சாலையில் தினமும் இது போன்ற வாக்குவாதங்கள் நடப்பது இயல்பாகிவிட்டது. சில நேரங்களில் வாக்குவாதம் முற்றி கைகலப்பிலும் முடிந்துள்ளது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பேருந்துகளின் அட்டகாசங்களை கட்டுபடுத்த சரியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இதனால் இன்னும் பேருந்து ஓட்டுனர்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

நம்மை போல சாலையில் செல்லும் அனைவருக்கும் குடும்பங்கள் உள்ளது. அவர்களும் சக மனிதர்கள் என்பதை நினைத்து உயிர்களை மதித்து முறையாக வாகனங்களை இயக்கினால் அமைதியாக பயணிக்கலாம் என்பதே அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...