இடிந்து விழும் நிலையில் பேருந்து நிலைய மேற்கூரை..!

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த பேருந்து நிலையத்தின் மேற்கூரையும், தூண்களும் சிதிலமடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.



அதிகளவில் பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் உடனடியாக இவற்றை சரி செய்யாவிட்டால் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்துக்கும் மேற்பட்டோர் இறந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பழைய பேருந்து நிலையத்தில் ஆபத்தான நிலையில் காணப்படும் கான்கிரீட் மேற்கூரைகள் மற்றும் தூண்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...