வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் - விவசாயிகள் சங்கம்

வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை: வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

கோவை மதுக்கரை வனச்சரகத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட "களிறு" திட்டக் கூட்டம் நடை பெற்றது. மதுக்கரை வனச்சரகர் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வன விலங்குகளுடன் ஏற்படும் மனித மோதல்களை தடுக்க விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வலுக்குப்பாறை பாலு, "மற்ற மாநிலங்களால் வனவிலங்குகளால் சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு அதிகமாகவும், உடனடியாகவும் கிடைக்கிறது. அதுபோலவே தமிழ்நாடு அரசு துரிதமாக இழப்பீட்டு வழங்க வேண்டும்."என்றார். 



நிகழ்வில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...