'பார்க் 2018' விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய பதானி

பார்க் கல்லுரி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமாங் பதானி பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

கோவை : பார்க் கல்லுரி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமாங் பதானி பரிசுகளை வழங்கி கவுரவித்தார். 



கணியூரில் உள்ள பார்க் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. 

பார்க் குளோபல் பள்ளியில் பயிலும் மாணவி வைஷ்ணவியின் யோகா நிகழ்ச்சியுடன் இந்த விழா தொடங்கப்பட்டது. பின்னர், நிகழ்ச்சியில் பேசிய, பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி அனுஷா, ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்று வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் டி20 கிரிக்கெட் பயிற்சி முகாமில் 30 உறுப்பினர்கள் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்ட பி.சி.டி. மாணவர்கள் மூவரையும் பாராட்டினார். 

மேலும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 15 வருடங்களாக, பல்கலைக்கழகம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பதக்கம் பெறும் மாணவரின் அந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை பார்க் கல்வி நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் நடைமுறை​யையும் அவர் அறிவித்தார். 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங் ​பதானி, வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். அப்போது, பேசிய அவர், பல இடங்களுக்குச் சென்று மாணவர்களை விளையாட்டு துறையில் ஊக்குவிப்பதனை தமது விருப்பமாகத் தெரிவித்தார். கல்விக்கு இணையாக விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...