பெண்களுக்கான இருசக்கர மானிய திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

தமிழகத்தில் பெண்களுக்கான இருசக்கர மானிய திட்டத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பெண்களுக்கான இருசக்கர மானிய திட்டத்தை சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் பெண்களுக்கான இருசக்கர மானிய திட்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், விழா நடக்கும் சென்னை கலைவாணர் அரங்கிற்கு வந்த பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளையொட்டி, 70 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில்,  5 பெண்களுக்கு மானிய ஸ்கூட்டரை வழங்கி, இருசக்கர மானிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், "அன்புமிக்க சகோதர, சகோதரிகளே வணக்கம். தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் தலை வணங்குகிறேன். மகாகவி பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமை கொள்கிறேன். ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் பங்கு பெறுவது மகிழ்ச்சி. அவரின் கனவுத் திட்டமான மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். பெண்கள் மேம்பாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய இரு திட்டங்களும் மகத்தானது. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் எந்தவித உத்தரவாதமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தில் பயன் பெற்றவர்கள் 70 சதவீதம் பேர் பெண்கள். ஜெயலலிதா எங்கிருந்தாலும் உங்கள் முகங்களில் மகிழ்ச்சியைக் கண்டு அவர் மகிழ்வார். குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் குடும்பமே படித்ததற்கு சமம். பெண்ணின் நலம் பேணினால் குடும்ப நலன் மேம்படும். சுகாதாரம், விவசாயிகளின் நலனை இலக்காகக் கொண்டு அரசு செயல்படுகிறது. சூரிய மின்சக்தி, தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாய கூட்டணியில் 14-வது நிதி குழுவின் மூலம் தமிழகத்திற்கு ரூ. 1.80 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியைக் காட்டிலும் பா.ஜ.க., ஆட்சியில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

மகப்பேறு விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தின் மூலம் அதிகளவில் பெண்கள் பயன்பெறுகின்றனர். 31 கோடி ஜன்தன் திட்டத்தில் 16 கோடி வங்கி கணக்குகள் பெண்களுடையது. 3.5 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெண்கள் உரிமை மதிக்கப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 9.5 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் குடும்பத்திற்கு பெரும் பயனைத் தரும். 

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் தமிழக விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். மீன்பிடித்தலை நவீனமயமாக்கியதன் மூலம் தமிழகம் பயன்பெற்றது. மீனவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.100 கோடி வழங்கப்பட்டுள்ளது," இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...