சட்டவிரோதமாக விற்பனை செய்த போதைப் பொருட்கள் பறிமுதல்

நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 50 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


நீலகிரி: நீலகிரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 50,000 மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் தற்போது பள்ளியில் பயிலும் மாணவர்கள் குட்கா மற்றும் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி அருகில் உள்ள கடைகளில் குட்கா, புகையிலை சோதனைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளில், மாவட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் வட்டார அலுவலர் கலா, முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறையினர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக, வைக்கப்பட்டிருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.



Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...