98 வயதிலும் யோகாசனம் செய்து வரும் கோவையைச் சேர்ந்த பத்மஸ்ரீ நானம்மாள் பாட்டிக்கு கோவை மாநகரின் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பாக இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை : 98 வயதிலும் யோகாசனம் செய்து வரும் கோவையைச் சேர்ந்த பத்மஸ்ரீ நானம்மாள் பாட்டிக்கு கோவை மாநகரின் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பாக இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை கணபதியைச் சேர்ந்த நானம்மாள் பாட்டி எட்டு வயதாக இருக்கும் போது தன்னுடைய தந்தையிடமிருந்து யோகா கற்றுக்கொண்டார். அப்போது முதல் தற்போது வரை சுமார் 90 வருடங்களாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி, பலருக்கும் யோகா கற்றுக்கொடுத்து வருகிறார்.

இதனிடையே, இவரின் இந்தத் திறமையும், சேவையும் பாராட்டி மத்திய அரசு இந்த ஆண்டின் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கியுள்ளது. இது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற நானாம்மாள் பாட்டியை கவுரவிக்கும் வகையில் கோவை மாநகரின் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பாக இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் பல்வேறு மகிளர் அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

"ராகி, சாமை, கோதுமை, கம்பு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி போன்றவை தான் சாப்பிடுவேன். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து யோகாசனம் செய்வேன், பேரன், பேத்தி என அனைவருக்கும் யோகாசனம் சொல்லிக் கொடுப்பேன். பெண்கள் யோகா செய்தால் கை, கால் வலி வராது, சுகபிரசவம் ஆகும். அனைவரும் யோகா செய்தால் நலமுடன் வாழலாம்," என்றார் நானம்மாள். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக யோகா பாட்டி பத்மஸ்ரீ நானம்மாளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

கோவை கணபதியைச் சேர்ந்த நானம்மாள் பாட்டி எட்டு வயதாக இருக்கும் போது தன்னுடைய தந்தையிடமிருந்து யோகா கற்றுக்கொண்டார். அப்போது முதல் தற்போது வரை சுமார் 90 வருடங்களாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமின்றி, பலருக்கும் யோகா கற்றுக்கொடுத்து வருகிறார்.

இதனிடையே, இவரின் இந்தத் திறமையும், சேவையும் பாராட்டி மத்திய அரசு இந்த ஆண்டின் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கியுள்ளது. இது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற நானாம்மாள் பாட்டியை கவுரவிக்கும் வகையில் கோவை மாநகரின் அனைத்து மகளிர் அமைப்புகள் சார்பாக இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் பல்வேறு மகிளர் அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

"ராகி, சாமை, கோதுமை, கம்பு, வரகு அரிசி, குதிரைவாலி அரிசி போன்றவை தான் சாப்பிடுவேன். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து யோகாசனம் செய்வேன், பேரன், பேத்தி என அனைவருக்கும் யோகாசனம் சொல்லிக் கொடுப்பேன். பெண்கள் யோகா செய்தால் கை, கால் வலி வராது, சுகபிரசவம் ஆகும். அனைவரும் யோகா செய்தால் நலமுடன் வாழலாம்," என்றார் நானம்மாள். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக யோகா பாட்டி பத்மஸ்ரீ நானம்மாளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.