சிவராத்திரியை கோலாகலமாகக் கொண்டாடிய பழங்குடியின மக்கள்

நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் உள்ள ஸ்ரீ பொம்மதேவர் கோயிலில் பழங்குடியினர் சிவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இதனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் உள்ள ஸ்ரீ பொம்மதேவர் கோயிலில் பழங்குடியினர் சிவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடினர். இதனை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட பொதுமக்கள் கண்டு ரசித்தனர். 



முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, தொரப்பள்ளி, பொக்காபுரம், சொக்கநள்ளி கிராமங்களில் ஏராளமான பழங்குடியினர் வசிக்கின்றனர். இவர்கள் தெப்பக்காட்டில் உள்ள ஸ்ரீ பொம்மதேவர் கோயிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டுக்கான விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14-ம் தேதி சிவனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. 15-ம் தேதி பழங்குடியின மக்களின் கலாச்சார ஆட்டம் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடந்தது. 

விழாவில் பங்கேற்க முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, தொரப்பள்ளி, பொக்காபுரம், சொக்கநள்ளி, பந்திப்பூர் பகுதிகளில் பெட்டுக்குறும்பர் மற்றும் இருளர் மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்கள் கடந்த நான்கு நாட்களாக கோயில் வளாகத்திலேயே தங்கி விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். இன்று காலை முதல் மாலை வரை பழங்குடியினர் மக்கள் கோயில் வளாகத்தில் தங்கள் கலாச்சார நடனங்களை ஆடி மகிழ்ந்தனர். பழங்குடியினரின் நடனங்களை பொதுமக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இரவு பழங்குடியின மக்கள் தங்கள் நேர்க்கடனை நிறைவேற்ற பூங்குண்டத்தில் இறங்கினர். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...