உழவர் தினவிழா 2018 மற்றும் புதிய பயிர் இரகங்கள் வெளியீட்டு விழா

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உழவர் தின விழா மற்றும் புதிய பயிர் ரகங்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

கோவை : கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உழவர் தின விழா மற்றும் புதிய பயிர் ரகங்கள் வெளியீட்டு விழா இன்று  நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகளும் கலந்து கொண்டனர். இந்த விழாவில், விவசாயம் சார்ந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய கருவிகளையும், புதிய பயிர் ரகங்களையும் அமைச்சர்கள் அறிமுகப்படுத்தி வெளியிட்டனர். மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. வேளாண் செம்மல் விருது, புதிய கண்டுபிடிப்பாளர் விருது, சிறந்த பெண் விவசாயிகளுக்கான விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டது.



உழவர் தின விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், சிறந்த பல்கலைக்கழகமாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. மேலும், காங்கேயத்திலிருந்து கேரளாவிற்கு வரும் தேங்காய் எண்ணெய்கள் தரமற்று இருப்பதாகக் கேரளா அமைச்சர் சைலஜா கூறி இருப்பது தவறான தகவல். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அனுப்பப்படும் எண்ணெய், காய்கறிகள் என அனைத்தும் தரமானவை. மேலும், கோவை மாநகராட்சியில் கான்ட்ரெக்ட் எடுத்து செய்யும் வேலைகளில் பல கோடி முறைகேடு என்ற குற்றச்சாட்டிலும், எந்தவித உண்மையும் இல்லை. இவ்வாறு கூறினார்.  எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...