மாநகருக்கு வெளியே தலைதூக்கியுள்ள பேனர் கலாச்சாரம் : கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்...?

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர் கலாச்சாரங்கள் கட்டுக்குள் வந்தாலும், மாநகருக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர் கலாச்சாரங்கள் கட்டுக்குள் வந்தாலும், மாநகருக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். 



கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலை சந்திப்புகளில் விளம்பரப் பலகைகள் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுகின்றன. இவற்றை நகரமைப்பு பிரிவினர் அகற்றினாலும், அனுமதியின்றி மீண்டும் மீண்டும் வைக்கப்படுகின்றன. அதனால், விளம்பர பலகைகளுக்கான இரும்பு ஆங்கிள்களையும் வெட்டி அகற்ற மாநகராட்சி தனி அலுவலர்  உத்தரவிட்டார். இதையடுத்து, மண்டலம் வாரியாக அனைத்து பகுதிகளிலும், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வந்தன.

அவினாசி சாலையில் ஆர்.ஜி. புதுார், ஹோப்ஸ், சித்ரா சந்திப்பு, விமான நிலைய சாலை, தடாகம் சாலை - இடையர்பாளையம் சிக்னல், பி.என். புதுார், அவினாசி ரோடு மேம்பாலம், காந்திபுரம், போத்தனுார் - நஞ்சுண்டாபுரம் சாலை உள்ளிட்ட 50 இடங்களில் இருந்த பிளக்ஸ் போர்டுகள் மற்றும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. இரும்பு ஆங்கிள்கள் அனைத்தும் வெட்டி எடுக்கப்பட்டன.



கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் முதல் நேற்று வரை 6,184 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு உள்ளதாம். இது தொடர்பாக, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், அனுமதியற்ற விளம்பரப் பலகைகளை அகற்ற நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, விபத்துக்கும் வழிவகுக்கின்றன. அவற்றை அகற்றுவதோடு, மீண்டும் வைக்காமல் இருக்க இரும்பு ஆங்கிள்களையும் அகற்றி வருகிறோம். இந்நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார். 

இவ்வளவு விளம்பரப் பலகைகளை அகற்றியுள்ளதாக நகரமைப்புப் பிரிவினர் கூறினாலும், மாநகராட்சி எல்லைக்குள் அவினாசி சாலை, திருச்சி சாலை, ஆத்துப்பாலம், பாலக்காடு சாலை, சத்தி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், தனியார் இடங்கள் மற்றும் கட்டடங்களின் மீது பிரமாண்டமான விளம்பரப் பலகைகள் இன்னும் இருப்பது கண் கூடாகத் தெரிகிறது. மாநகராட்சி எல்லைக்கு வெளியிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. அனைத்தையும் அகற்ற வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்தினுடையது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...