திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நிர்வாகத்தை நடத்துவது தொடர்பாக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியை நிர்வாகத்தை நடத்துவது தொடர்பாக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகம்பாளையம் பகுதியில் காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களுக்கான மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் அறக்கட்டளைக்கு முருகசாமி என்பவர் மாற்றுத்திறனாளி தலைவராக உள்ளார். இந்நிலையில், முருகசாமியின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பொய் புகார் மூலம் அறக்கட்டளை நிர்வாகத்தைக் கைப்பற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி மற்றும் உணவும் தரப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் முருகசாமியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பழைய நிர்வாகிகளுடன் பள்ளிக்கு சென்ற முருகசாமி, இதுகுறித்து புதிய நிர்வாகிகளிடம் கேட்டு, பள்ளியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்தப் பள்ளியின் மாணவன் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தகவலறிந்து வந்த வீரபாண்டி போலீஸார் இருதரப்பினரையும் விசாரித்து காவல்நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.

முருகம்பாளையம் பகுதியில் காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவர்களுக்கான மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் அறக்கட்டளைக்கு முருகசாமி என்பவர் மாற்றுத்திறனாளி தலைவராக உள்ளார். இந்நிலையில், முருகசாமியின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பொய் புகார் மூலம் அறக்கட்டளை நிர்வாகத்தைக் கைப்பற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சரியான முறையில் கல்வி மற்றும் உணவும் தரப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் முருகசாமியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, பழைய நிர்வாகிகளுடன் பள்ளிக்கு சென்ற முருகசாமி, இதுகுறித்து புதிய நிர்வாகிகளிடம் கேட்டு, பள்ளியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்தப் பள்ளியின் மாணவன் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தகவலறிந்து வந்த வீரபாண்டி போலீஸார் இருதரப்பினரையும் விசாரித்து காவல்நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.