விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பான பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
கோவை: விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பான பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.

'கோயம்புத்தூர் அவசரக்கால மீட்ப்புக்குழு' சார்பில் விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது தொடர்பாக கல்லூரி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. நேற்று சித்தாப்புதூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, வாகன விபத்து, தீ விபத்து, இயற்கை சீற்றங்கள் போன்ற விபத்துகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவிகள் அளிப்பது? என்பது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில், முதலுதவி செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் சந்தேகங்களை மாணவர்கள் அந்த துறை நிபுணர்களிடம் கேட்டு அறிந்து கொண்டனர்.